தர்மபுரி, பிப்.5: பாப்பாரப்பட்டி சந்தையில் சுங்க கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி, கலெக்டரிடம் விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், பாப்பாரப்பட்டி இடைக்குழு சார்பில், சக்திவேல் என்பவர், நேற்று தர்மபுரி கலெக்டர் மலர்விழியிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: பாப்பாரப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில், 2019-20ம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கான வாரச்சந்தை, தினசரி மார்க்கெட்டில் வரலாறு காணாத அளவிற்கு சுங்க கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. விற்பனைக்கு வரும் தலைச்சுமைக்கு ₹20, சைக்கிள் சுமை, விறகு சுமை, மாடு, ஆடு, கோழி, தக்காளி கூடை ஆகியவற்றுக்கு சுங்க கட்டணம் ₹20, மாட்டு வண்டிக்கு ₹25, பாரத்துடன் மாட்டு வண்டிக்கு ₹40, பலகார கடை, காய்கறி கடைக்கு ₹30 என 76 வகை இனங்களுக்கு சுங்க கட்டணம் அதிகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களை பாதிக்கும் சுங்க கட்டணத்தை குறைத்த பின்னரே, ஏலத்தை நடத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதேபோல், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள், கலெக்டர் மலர்விழியிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: