நல்லம்பள்ளி அருகே டாஸ்மாக் கடை வைக்க எதிர்ப்பு; மக்கள் முற்றுகை

தர்மபுரி, ஜன.11: நல்லம்பள்ளி அருகே பாலஜங்கமனஹள்ளி அடுத்த இருசன்கொட்டாயில், அப்பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான நிலத்தில், புதிதாக கடை ஒன்று கட்டியுள்ளார். இக்கடை டாஸ்மாக் கடை வைக்க வழங்கப்படவுள்ளதாக இருசன்கொட்டாய், பாலஜங்கமனஹள்ளி மற்றும் அதை ஒட்டியுள்ள கிராமமக்களுக்கு தகவல் பரவியது. இதையடுத்து, கிராம மக்கள், புதிதாக கட்டப்பட்ட கடையை நேற்று மாலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த தாசில்தார் பழனியம்மாள் மற்றும் அதியமான்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு ெசன்றனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம், இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்படாது என உறுதி அளித்தனர். ஆனால், இதை ஏற்க மறுத்த மக்கள், இரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Related Stories: