தர்மபுரி, டிச.18: மார்கழி மாதம் பிறந்த நிலையில், தர்மபுரியில் பனிப்பொழிவால் கடுமையான குளிர் நிலவுகிறது. தமிழகத்தில் நடப்பாண்டில், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்து ேபானதால், விவசாய சாகுபடி குறைந்துள்ளது. மேலும், நீர்நிலைகள் வறண்டு நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மார்கழி மாதம் பிறந்தது. இம்மாதத்தில் அதிக பனிப்பொழிவால் அதிகாலையில் கடுமையான குளிர் காணப்படும். கடந்த நவம்பர் மாதம் அதிக பட்சமாக 19 டிகிரி செல்சியஸ் குளிர் நிலவியது.