கரூர், டிச. 12: 1,330 திருக்குறள் ஒப்பிவிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப்பரிசாக வழங்கப்படு உள்ளதால் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன. கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:திருக்குறளில் உள்ள கருத்துக்களை பள்ளி மாணவர்கள் இளம் வயதிலேயே அறிந்து கொண்டு, கல்வியறிவோடு நல்லொழுக்கம் மிக்கவர்களாக விளங்கும் வகையில் தமிழக அரசால் திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசுத்திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது.