பல்கலை தேர்வில் சாதனை புனித ஜோன்ஸ் கல்வியியல் கல்லூரி மாணவிக்கு பாராட்டு

கிருஷ்ணகிரி, டிச.11: பல்கலைக்கழக தேர்வில் மாநில அளவிலம் 2ம் இடம் பிடித்த புனித ஜோன்ஸ் கல்வியியல் கல்லூரி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி-சென்னை சாலையில் மிட்டப்பள்ளியில் இயங்கி வரும் பிஎஸ்வி கல்வி நிறுவனங்களின் இணை நிறுவனமாக செயின்ட் ஜோன்ஸ் கல்வியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரி மாணவ, மாணவிகள் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் நடத்திய தேர்வில் சாதனை படைத்துள்ளனர். மாணவி வினிதா, மாநில அளவில் 2ம் இடம் பிடித்துள்ளார். அவருக்கு கல்லூரியின் நிறுவனர் டாக்டர் செல்வம், இயக்குனர் புஷ்பா செல்வம், செயலாளர் விவேக், துணை செயலாளர் சாந்தமீனா மற்றும் முதல்வர் எழில்மாறன் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories: