தர்மபுரி, டிச.7: தர்மபுரி மாவட்டத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. குமாரசாமிபேட்டை, கடகத்தூர் ஆகிய இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதே போல், அதியமான்கோட்டையில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் ஒகேனக்கல்லில் இருந்து தர்மபுரி வழியாக சென்னை செல்லும் பயணிகளுக்கு வசதியாக, ஒகேனக்கல்- திருப்பத்தூர் இருவழி சாலை ₹43 கோடி மதிப்பீட்டில் 4 வழி சாலையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. தர்மபுரி குமாரசாமி பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் இருந்து, ஆட்டுக்காரம்பட்டி வரையில் நான்கு வழி பாதையாக மாற்ற, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.