விவசாயிகளுக்கு கூட்டுப்பண்ணைய பயிற்சி

தர்மபுரி, டிச.7: நல்லம்பள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட சோழியானூரில், விவசாயிகளுக்கு கூட்டு பண்ணையம் குறித்து பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பயிற்சியில் நல்லம்பள்ளி ேவளாண்மை உதவி இயக்குனர் தேன்மொழி தலைமை வகித்து பேசினார். உழவர் பயிற்சி நிலைய அலுவலர் சுதா முன்னிலை வகித்தார். சிறு,குறு விவசாயிகளை குழுவாக அமைத்து இடுபொருள் வாங்கும் செலவை குறைத்தல், ஒருங்கிணைந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்கி தொழில்முனைவோர் ஆகுதல் குறித்தும், உயிரி உரங்கள், பசுந்தாள் உரங்கள் மற்றும் மண்புழு உரம் தயாரித்தல், பஞ்சகவ்யம் தயாரித்தல் குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது. உதவி வேளாண் அலுவலர் மாதேஸ், வட்டார தொழில்நுட்ப மேலாளர் அருண்குமார், உதவி தொழில்நுட்ப மேலாளர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: