கரூர்,டிச.7: பொங்கல் பண்டிகைககாக பானை தயாரிக்கும் பணி மும்முரமாக நடை பெறுகிறது. ஒரு பெரிய பானை ரூ.300க்கு விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை நெரு ங்கி வருவதால் கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மண்பானை தயாரிப்பு பணிகள் விறு, விறுப்பாக நடை பெறுகிறது.பொங்கல் பண்டிகைக்கு மண்பானை பயன்படுத்தும் வழக்கம் அதிகரித்து வருகிறது. நகர பகுதி யில் இருப்பவர்கள் கூட அதிக அளவில் மண்பானை பயன்படுத்தி பொங்கலிடுகின்றனர்.இதனால் வியாபாரிகள் பானைகள் கேட்டு பானை செய்வோரை அணுகி வருகின்றனர். இது குறித்து மண்பானை செய்யும் தொழிலாளர்கள் கூறுகையில், பானை செய்வதற்கான மண் ஏரி மற்றும் குளங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. இவ்வகை மண் குறைந்த அளவிலேயே கிடைக்கிறது.ஒரு டிப்பர் லாரி களிமண் ரூ.20ஆயிரம் வரை விலை கொடுத்து வாங்கி, தேவைக்கேற்ப பானை செய்பவர்கள் பிரித்துக் கொள்வோம். களிமண், மணல், கரும்புச்சக்கை போன்றவை மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.