பாலத்திற்கு தோண்டப்பட்ட குழியில் விழுந்து பூ வியாபாரி பலி

தர்மபுரி, டிச.6: காரிமங்கலம் அருகே பாலத்திற்கு தோண்டப்பட்ட குழியில் பூ வியாபாரி தவறி விழுந்து உயிரிழந்தார். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பந்தாரஅள்ளி பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மகன் குமார் (30). பூ வியாபாரி. விவசாயிகளிடம் பூக்களை நேரடியாக வாங்கி, அதை பெங்களூருவில் விற்பனை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு காரிமங்கலத்தில் இருந்து வீட்டிற்கு டூவீலரில் சென்றார். அப்போது, பந்தாரஅள்ளியில் பகுதியில் கட்டப்பட்டு வரும் பாலத்திற்காக தோண்டப்பட்ட குழியில் தடுமாறி விழுந்தார். இதில் காயமடைந்த அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை வேலாயுதம் உயிரிழந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: