பிஎஸ்வி பொறியியல் கல்லூரி மாணவர் மாநில ஜூடோ போட்டியில் முதலிடம்

கிருஷ்ணகிரி, டிச.6: கிருஷ்ணகிரி-சென்னை சாலையில் மிட்டப்பள்ளியில், பிஎஸ்வி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி செயல்படுகிறது.  இக்கல்லூரி மாணவர் ராஜீவ், ஜூடோ போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பிஎஸ்வி பொறியியல் கல்லூரி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இறுதியாண்டு பயிலும் மாணவரான ராஜீவ், ஜூடோ போட்டியிலும் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பதக்கம் வென்ற மாணவர் ராஜீவை கல்லூரி நிறுவனர் டாக்டர் செல்வம், இயக்குனர் புஷ்பாசெல்வம், செயலாளர் விவேக், இணைசெயலாளர் சாந்தமீனா மற்றும் முதல்வர் லாரன்ஸ், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் வாழ்த்தினர்.

Related Stories: