காரிமங்கலம், நவ.27: காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். காரிமங்கலம்- மொரப்பூர் ரோட்டில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த 5ஆண்டுகளுக்கு முன் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். கல்வி தரம் குறைந்ததால், மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, தற்போது 1,300 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால், மாணவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.