நேரு பிறந்தநாள் விழா

ஈரோடு, நவ. 15: மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் 130வது பிறந்தநாளையொட்டி ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கட்சி அலுவலகத்தில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாநகர் மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கி நேருவின் படத்திற்கு மாலை அணிவித்து  பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.  இதில் மாவட்ட துணை தலைவர் ராஜேஸ்ராஜப்பா, மண்டல தலைவர் அயூப்அலி, பொதுச்செயலாளர்கள் அரவிந்த்ராஜ், சச்சிதானந்தன், ஆறுமுகம், முகமதுஅர்சத், சிவாஜிமன்றம் சிவராமன், சிறுபான்மை பிரிவு பாட்சா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: