புகழிமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார விழா

க.பரமத்தி, நவ.15:கரூர் ஒன்றியம் புஞ்சைபுகழூர் பேருராட்சியில் புகழிமலை என அழைக்கப்படும் ஆறுநாட்டார்மலையின் உச்சியில் முருகன் கோயில் அமைந்துள்ளது. புகழிமலை முருகன் கோயிலில் பரம்பரை அறங்காவலர்களால் 1908ஆண்டு முதல் சூரசம்ஹாரவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 8ம்தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்வான சூரனை வதம் செய்யும் விழா நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது இவ்விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள், பரம்பரை அறங்காவலர்கள், கட்டளைதாரர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.

Related Stories: