பொள்ளாச்சி, நவ.14: பொள்ளாச்சி அருகே பெரியாகவுண்டனூர் கிராமத்தில் கொட்டப்படும் இறைச்சிக்கழிவுகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சி அருகே உள்ள கிராம பகுதிகளில், கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்படும் இறைச்சிக்கழிவு, தோல்கழிவு, மருத்துவக்கழிவு உள்ளிட்டவை கொட்டுவது தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக, இறைச்சிக்கழிவுகள் அதிகளவில் கொட்டப்படுகிறது. இதனால், அப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இதில், உடுமலை ரோடு ஊஞ்சவேலாம்பட்டியிலிருந்து பிரிந்து செல்லும் தாராபுரம் ரோட்டில் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் இறைச்சிக்கழிவு கொட்டும் செயல் தொடர்ந்து அரங்கேறி வருகிறது-.