தர்மபுரி, நவ.8: கந்தசஷ்டியை முன்னிட்டு குமாரசாமி பேட்டை சிவசுப்ரமணியசுவாமி கோயிலில் லட்சார்ச்சனை இன்று துவங்குகிறது. தர்மபுரி குமாரசாமி பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் 54வது ஆண்டு கந்த சஷ்டி லட்சார்ச்சனை பெருவிழா 8ம் தேதி இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. தினமும் காலை முதல் இரவு வரை லட்சார்ச்சனை மற்றும் அபிஷேக ஆராதனைகள் திருமுறை பாராயணத்துடன் நடக்கிறது. லட்சார்ச்சனையின் நிறைவு நாளான வரும் 14ம் தேதி காலை பூர்த்தி ஹோமத்துடன் லட்சார்ச்சனை நிறைவு பெறுகிறது. இதையடுத்து கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.