தர்மபுரி, நவ.8: கௌரி விரதத்தை முன்னிட்டு, தர்மபுரி முருகன் கோயில்களில் படையல் வைத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.ஐப்பசி மாத அமாவாசையில், சுமங்கலி பெண்கள் கௌரி விரதம் இருப்பது வழக்கம். தாலி பாக்கியம் நிலைக்கவும், கணவரின் ஆயுள் அதிகரிக்கவும், வீட்டில் மங்கள நிகழ்ச்சி தொடரவும் கௌரி விரதத்தை பெண்கள் மேற்கொள்வர். நேற்று ஏராளமான பெண்கள் விரதம் இருந்து, குமாரசாமிபேட்டை முருகன் கோயிலில் படையல் வைத்து வழிபாடு நடத்தினர்.