கரூர், நவ.1: கரூர் மாவட்ட முதன்மை நீதிபதி நம்பிராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கரூர் மாவட்ட நீதித்துறையில் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 3 (தற்காலிக பணியிடங்கள்), முதுநிலை கட்டளை பணியாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர், அலுவலக உதவியாளர், சுகாதார பணியாளர், இரவுக் காவலர், துப்புரவு பணியாளர், மசால்சி, இரவுக்காவலர் மசால்சி, பதவிகளை நிரப்பிட தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் வயது, கல்வித்தகுதி, விண்ணப்படிவம், மற்றும் அனைத்து விதமான விபரங்களும் நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.