அரூர், அக்.26: மாவட்ட அளவிலான தடகள போட்டியில், அரூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். தர்மபுரி மாவட்ட அளவிலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கான தடகள விளையாட்டு போட்டி, தர்மபுரி மாவட்ட விளையாட்டு மையதானத்தில் நடந்தது. இதில், 45 பள்ளிகளை சேர்ந்த 700 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் அரூர் அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் சீனியர் பிரிவு கம்பு ஊன்றி தாண்டும் போட்டியில் ரகமத்துல்லா முதலிடமும், 10ம் வகுப்பு மாணவன் பிரவின் 2ம் இடமும் பெற்று சாதனை படைத்தனர்.