வேப்பனஹள்ளி, அக்.25: வேப்பனஹள்ளி சுற்றுவட்டார கிராமங்களில் 5 ரூபாய் நோட்டுகளை கடைக்காரர்கள் மற்றும் வியாபாரிகள் வாங்க மறுப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வேப்பனஹள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில், கடந்த சில நாட்களாக 5 ரூபாய் நோட்டுக்களை கடைக்காரர்கள் மற்றும் வியாபாரிகள் வாங்க மறுக்கின்றனர். மாறாக 5 ரூபாய் நாணயங்களை வாங்கிக்கொள்கின்றனர். அரசு, தனியார் பஸ்களில் 5 ரூபாய் நோட்டுக்களை கொடுத்தால், பொதுமக்கள் வாங்க மறுத்து தகராறில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நடத்துனர்களும், செய்வதறியாது திகைத்து வருகின்றனர். ஏற்கனவே 10 ரூபாய் நாணயங்களை யாரும் வாங்க மறுத்து வரும் நிலையில், வீண் புரளியால் 5 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுப்பதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.