தர்மபுரி, அக்.16: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உலக கை கழுவும் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில், சுத்தமாகவும், முறையாகவும் கை கழுவுவது குறித்து மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், உலக கைகழுவும் தினத்தை முன்னிட்டு கைகழுவுதல் பற்றி மாணவிகளுக்கு செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தலைமை ஆசிரியர் தெரசாள், உதவி தலைமை ஆசிரியர் புனிதா மற்றும் ஆயிரக்கணக்கான மாணவிகள் கலந்து கொண்டனர். இதே போல், அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, மகளிர் உயர்நிலைப்பள்ளி, அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, தொப்பூர் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் நேற்று கை கழுவும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.