தர்மபுரி, அக்.16: பாலக்கோடு அருகே பலாத்காரம் செய்து பெண் கொல்லப்பட்ட வழக்கில் தடயங்கள் சிக்கியது. குற்றவாளிகள் ஓரிரு நாளில் சிக்குவார்கள் என போலீசார் ெதரிவித்தனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள கால்வாய் பகுதியில் முட்புதரில் கடந்த 13ம் தேதி, பெண் ஒருவரின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. பாலக்கோடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், சுமார் 40வயது தக்க பெண் என்பதும், அவரது காலில் மெட்டியும் அணிந்திருந்தது தெரிய வந்தது. மேலும், அவருடைய மர்ம உறுப்பு தீ வைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளதும் தெரிய வந்தது. அந்த பெண்ணை மர்மநபர்கள் கடத்தி பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டு, ஆள்நடமாட்டம் இல்லாத முட்புதர் பகுதியில் எரித்துள்ளதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.