தர்மபுரி, அக்.11: நல்லம்பள்ளி தாலுகா அலுவலகத்தின் புதிய கட்டுமான பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரி, பாப்பிரெட்டிபட்டி, அரூர், பென்னாகரம், பாலக்கோடு உள்ளிட்ட 5 தாலுகாக்கள் இருந்தன. கடந்த 2 ஆண்டுக்கு முன் 6வது தாலுகாவாக தர்மபுரி தாலுகாவில் இருந்த நல்லம்பள்ளி, இண்டூர், தொப்பூர் ஆகிய பகுதிகளை பிரித்து நல்லம்பள்ளி தாலுகா உருவாக்கப்பட்டது. இதையடுத்து நல்லம்பள்ளி தாலுகா அலுவலகம் பிடிஓ அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு நல்லம்பள்ளி, தொப்பூர், இலளிகம், நார்த்தம்பட்டி,