சேவூரில் ரூ 62 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

அவிநாசி,செப்.25: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.62 லட்சத்து 30 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.  சேவூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 3080 மூட்டை நிலக்கடலை வந்திருந்தன. இந்த ஏலத்தில், குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.5000 முதல் ரூ.5200 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.4300 முதல் ரூ.4800 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.4000 முதல் ரூ.4095 வரையிலும் ஏலம் போனது.மொத்தம் ரூ.62 லட்சத்து 30 ஆயிரத்துக்கு ஏலம் நடைபெற்றது. இதில் 22 வியாபாரிகள், 94 விவசாயிகள் பங்கேற்றனர்.

Related Stories: