கடவூர், ஆக.14: தரகம்பட்டி குளத்துப் பகுதியில் ரப்பர் மற்றும் டெக்ஸ்டைல் கழிவுகள் கொட்டியவர்களை இப்பகுதி விவசாயிகள் பிடித்துக் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. கடவூர் ஒன்றியத்தில் காட்டுப் பகுதியில் மற்றும் விவசாய நிலங்கள் மற்றும் வனப்பகுதிகளில் தோல் கழிவு மூட்டைகள் கொட்டி வந்தனர். விவசாயிகள் கடும் எதிர்ப்பை அடுத்து கடந்த ஓராண்டாக இந்த பகுதியில் தோல் கழிவு மூட்டைகள் கொட்டப்படவில்லை. இந்த நிலையில் தரகம்பட்டியிலிருந்து வீரிசிங்கம்பட்டி சாலையில் உள்ள குளத்துப் பகுதியில் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது.