அரூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை

அரூர், ஆக.14:  அரூரில் ேபாக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க ேவண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரூர் கடைவீதியில் வாகன சென்று வருவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் இருக்கும். அதிலும் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் நடக்கும் வாரச்சந்தையன்று, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இந்த போக்குவரத்தை சரி செய்ய எந்த ஒரு போக்குவரத்து காவலர்களும் வருவதில்லை. மாறாக அரூர் ஊத்தங்கரை சாலை, அரூர்- சேலம் சாலையில் டோல்கேட் கட்டணத்தை தவிர்க்க,

இந்த வழியாக வரும் லாரிகளை, வாகன சோதனை செய்வதை முக்கிய பணியாக கொண்டு, போக்குவரத்து காவலர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதனால் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் நிற்பதால், போக்குவரத்து நெரிசல் தினந்தோறும் ஏற்பட்டு, விபத்து ஏற்பட்டு வருகிறது. வாகன சோதனையின் போது, நீண்ட வரிசையில் லாரிகள் நிற்பதால் விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: