தர்மபுரி, ஆக.14: தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோயிலில், கல்யாண காமாட்சி அம்பிகை சன்னதியில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு வளைகாப்பு நடந்தது. தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோயிலில், கல்யாண காமாட்சி அம்பிகை ஆலய ஆடி மாத விழா, கடந்த 4 நாட்களுக்கு முன் தொடங்கியது. ஆடி அமாவாசையையொட்டி, கடந்த 11ம் தேதி சிறப்பு பூஜை நடந்தது. நேற்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அம்மன் பால திரிபுரசுந்தரி கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.