ஆவடி: அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் ஆலோசனைப்படி, திருநின்றவூர் நகர கழக செயலாளர் ரவி வழிகாட்டுதல் படி நேற்று முன்தினம் திருநின்றவூர் நகர கழக நிர்வாகிகள் மற்றும் வார்டு செயலாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடவும், தலைவர் சிலை அமைக்கவும், புதிய திமுக உறுப்பினர்களை சேர்க்கவும், பூத் கமிட்டி அமைக்கவும், திருவாரூரில் நடைபெற இருக்கும் கழகத்தலைவர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழா மாநாட்டில் திருநின்றவூர் நகர கழகம் சார்பாக பெருந்திரளாக கலந்து கொள்ளவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.