அரையாண்டு விடுமுறை முடிந்தது இன்று பள்ளிகள் திறப்பு

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் கடந்த 10ம் தேதி முதல் உயர் வகுப்புகளுக்கும், 15ம் தேதி முதல் 23ம் தேதி வரையில் கீழ் வகுப்புகளுக்கும் அரையாண்டுத் தேர்வுகள் நடந்தது. இதையடுத்து கடந்த 24ம் தேதி முதல் அரையாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஜனவரி 4ம் தேதி வரை சுமார் 12 நாட்கள் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஜனவரி 5ம் தேதியில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

விடுமுறை 12 நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கிறஸ்துமஸ் பண்டிக்கை 25ம் தேதியும், 2026ம் ஆண்டு பிறப்பு ஜனவரி 1ம் தேதியும் சிறப்பாக கொண்டாடப்படும் என்பதால், பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். அதனால் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது. நேற்றுடன் மேற்கண்ட விடுமுறை நாட்கள் முடிந்ததை அடுத்து, இன்று வழக்கம் போல பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

பள்ளிகள் இன்று திறக்கப்படுவதை அடுத்து, அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பணி்கள் கடந்த இரண்டு நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பிப்வரி மாதம் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ மாணவியருக்கான செய்முறை வகுப்புகள் தொடங்க இருப்பதால் அதற்கான ஆயத்த பணிகளை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: