ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் கிராமம் அருகே வனப்பகுதி உள்ளது. தற்போது வெயில் சுட்டெரிப்பதால் இந்த வனப்பகுதியில் இருந்த 2 கரடிகள் நேற்று மாலை வெளியேறி தண்ணீர் தேடி அலைந்துள்ளது. அப்போது வனப்பகுதி அருகே உள்ள சிங்காரம் என்பவருக்கு சொந்தமான சுமார் 40 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் 2 கரடிகளும் தவறி விழுந்துள்ளன. மீண்டும் மேலே வரமுடியாமல் தத்தளித்தன. இதைப்பார்த்த சிலர் வாணியம்பாடி வனச்சரக அலுவலகத்திற்கு தெரிவித்தனர். அதன்பேரில், வனத்துறையினர் விரைந்து சென்றனர். கிணற்றில் இருந்த கரடிகளை கயிறு கட்டி இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.