ஏசியில் பொருத்தப்பட்டிருந்த காஸ் சிலிண்டர் வெடித்து மெக்கானிக் பரிதாப பலி

தஞ்சை: தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்த திருநாகேஸ்வரம் மேலமடவிளாகத்தை சேர்ந்தவர் மணிமாறன்(28). இவரது வீட்டின் மாடி பகுதியில் உள்ள அறையில் பழுதான ஏசியை சரி செய்வதற்காக தாராசுரத்தை சேர்ந்த சேக் அலாவுதீன்(24), கணேஷ்(23) ஆகியோர் நேற்று முன்தினம் வந்தனர். இவர்கள் இருவரும் பழுதடைந்த ஏசியில் காஸ் நிரப்பும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏசியில் இருந்த காஸ் சிலிண்டர் வெடித்து 2 பேரும் காயமடைந்தனர்.

இதையடுத்து 2 பேரையும் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கணேஷ் உயிரிழந்தார். ஷேக் அலாவுதீனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருநீலக்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: