தஞ்சை: தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்த திருநாகேஸ்வரம் மேலமடவிளாகத்தை சேர்ந்தவர் மணிமாறன்(28). இவரது வீட்டின் மாடி பகுதியில் உள்ள அறையில் பழுதான ஏசியை சரி செய்வதற்காக தாராசுரத்தை சேர்ந்த சேக் அலாவுதீன்(24), கணேஷ்(23) ஆகியோர் நேற்று முன்தினம் வந்தனர். இவர்கள் இருவரும் பழுதடைந்த ஏசியில் காஸ் நிரப்பும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏசியில் இருந்த காஸ் சிலிண்டர் வெடித்து 2 பேரும் காயமடைந்தனர்.