பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 45 பேர் படுகாயம்

ஜெயங்கொண்டம்: விருத்தாச்சலம் அருகே உள்ள கார்கூடல் கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவருக்கும், அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் இன்று காலை செந்துறையில் திருமணம் நடைபெற்றது. இதையொட்டி மணப்பெண்ணின் ஊரில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் தனியார் பஸ்சில் திருமணத்திற்கு சென்றனர். திருமணம் முடிந்து இன்று காலை மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர்.

தேவனூர் கல்வெட்டு திருப்பத்தில் திரும்பிய போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் பயணம் செய்த ஆண், பெண், சிறுவர்கள் உள்பட 45 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: