ஜெயங்கொண்டம்: விருத்தாச்சலம் அருகே உள்ள கார்கூடல் கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவருக்கும், அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் இன்று காலை செந்துறையில் திருமணம் நடைபெற்றது. இதையொட்டி மணப்பெண்ணின் ஊரில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் தனியார் பஸ்சில் திருமணத்திற்கு சென்றனர். திருமணம் முடிந்து இன்று காலை மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர்.