விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் குண்டலபுலியூர் அன்பு ஜோதி ஆசிரம வழக்கில் கைதான நிர்வாகி ஜூபின்பேபி உள்ளிட்ட 6 பேரிடம் போலீஸ் காவலில் 2வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூரில் உள்ள அன்புஜோதி ஆசிரமத்தில் பலர் காணாமல் போனதாகவும், பாலியல் பலாத்காரம் புகார்கள் எழுந்தன. இந்த வழக்கில் கைதாகி வேடம்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜூபின்பேபி மனைவி மரியா, பணியாளர்கள் பிஜூமோகன், கோபிநாத், பூபாலன், அய்யப்பன் உள்ளிட்ட 6 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க விழுப்புரம் நீதிமன்றம் அனுமதி அளித்தது இதையடுத்து 6 பேரையும் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ஒரு தனி அறையில் அழைத்து சென்று தனித்தனியாக விசாரணை நடத்தினர்.