மும்பை: சிவசேனா கட்சி மற்றும் சின்னத்தை பெற ரூ. 2,000 கோடி வரை பேரம் நடந்துள்ளதாக உத்தவ் அணியின் ஆதரவு எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணிதான், உண்மையான சிவசேனா மற்றும் வில்அம்பு சின்னத்தை பயன்படுத்த தகுதிபெற்றது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அணியினர் ஏற்கவில்லை. இதுகுறித்து உத்தவ் அணியின் ஆதரவு எம்பி சஞ்சய் ராவத் வெளியிட்டுள்ள பதிவில், ‘வில்அம்பு சின்னத்தை பெறுவதற்காக ரூ.2,000 கோடி பரிவர்த்தனை நடந்துள்ளது.