ராகுல் குறித்த சர்ச்சை பூனம் கவுர் காட்டம்

ஐதராபாத்: நடிகை பூனம் கவுரின் கையை, ராகுல் காந்தி பிடித்துக்கொண்டு செல்லும் போட்டோ பலத்த சர்ச்சை கிளப்பியுள்ள நிலையில், அதுபற்றி பூனம் கவுர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தெலங்கானா மாநிலத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இதில் நடிகை பூனம் கவுர் கலந்துகொண்டார். அப்போது அவர் ராகுல் காந்தியின் கையைப் பிடித்தபடி நடைபயணம் மேற்கொண்டார். இந்த போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதை தொடர்ந்து பாஜ தலைவர்கள் சிலர், ராகுல் காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் பூனம் கவுர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘இதுபோன்ற கருத்துகள் இழிவுபடுத்தும் வகையில் இருக்கிறது. பெண் சக்தி குறித்து பிரதமர் மோடி பேசியிருப்பதை நினைவில் கொள்ளுங்கள். நடைபயணத்தில் எதிர்பாராவிதமாக தவறி விழுந்தேன். அப்போது என் கையை ராகுல் காந்தி பிடித்துக்கொண்டார்’ என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: