ஐதராபாத்: நடிகை பூனம் கவுரின் கையை, ராகுல் காந்தி பிடித்துக்கொண்டு செல்லும் போட்டோ பலத்த சர்ச்சை கிளப்பியுள்ள நிலையில், அதுபற்றி பூனம் கவுர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தெலங்கானா மாநிலத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இதில் நடிகை பூனம் கவுர் கலந்துகொண்டார். அப்போது அவர் ராகுல் காந்தியின் கையைப் பிடித்தபடி நடைபயணம் மேற்கொண்டார். இந்த போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.