தமிழகம் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறப்பு!: தஞ்சையில் பட்டாசு வெடித்து விவசாயிகள் மகிழ்ச்சி..!! Jun 12, 2021 அணிகலனாகும் அணை Thanjam அஞ்சய் மேட்டூர் அணை கெ ஸ்டாலின் காவிரி தஞ்சை தஞ்சை: குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்துவிட்டுள்ளார். இதனால் காவிரி பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகளுக்காக மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சற்று நேரத்திற்கு முன்பு தண்ணீர் திறந்து வைத்தார். இதற்கு தஞ்சை மாவட்டத்தில் இருக்கக்கூடிய விவசாயிகள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள். காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்திருக்கிறார். கல்லணை, வெள்ளாறு உள்ளிட்ட பகுதிகளில் ஆறுகள் எந்த அளவிற்கு தூர்வாரப்பட்டிருக்கிறது. அணைகள் பாதுகாப்பாக இருக்கிறதா என்பது குறித்து நேற்று மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ச்சியாக, தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட மாவட்டங்களில் கிட்டத்தட்ட 65.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்லும் வகையில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்துவிட்டார். இதற்கு தஞ்சை மாவட்ட விவசாயிகள் நன்றி தெரிவித்து, பட்டாசு வெடித்து மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். … The post குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறப்பு!: தஞ்சையில் பட்டாசு வெடித்து விவசாயிகள் மகிழ்ச்சி..!! appeared first on Dinakaran.
செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூரில் இருந்து 50 ஊராட்சிகளை இணைத்து சென்னை மாநகரை விரிவாக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: அரசு துறை அதிகாரிகள் ஆலோசனை
ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்த விவகாரம் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட 4 பேர் விசாரணைக்கு ஆஜராகவில்லை: 4ம் தேதிக்கு பிறகு ஆஜராக போவதாக தகவல்
உபரியாக பணிபுரிந்து வந்த ஆசிரியர்களுக்கான பணி நிரவல் 244 பணியிடங்களுக்கு முறையான ஆசிரியர்கள் நியமனம்: பள்ளிக்கல்வித்துறை தகவல்
ஜூன் 10ம் தேதி திறக்கப்படுவதை முன்னிட்டு பள்ளிகளில் தூய்மைப்பணி மேற்கொள்ள வேண்டும்: பள்ளி கல்வித்துறை உத்தரவு
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மின்துறையின் முனைப்பான திட்டங்களால் மின்தடையில்லா மாநிலமானது தமிழ்நாடு
வரும் 4ம் தேதி 39 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை சட்டம் – ஒழுங்கு தொடர்பாக தலைமை செயலாளர் ஆலோசனை: டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்பு
நண்பரின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 17 வயது சிறுவன் வெயிலுக்கு சுருண்டு விழுந்து பரிதாப பலி: சென்னை அருகே சோகம்
உடல் உறுப்பு தானம் வழங்கியவர்களுக்கு அறுவை சிகிச்சைக்கு பிறகு மருத்துவ செலவுக்காக 3 ஆண்டுக்கு உதவி தொகை வழங்க நடவடிக்கை: மாநில அளவிலான குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
காக்களூர் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள பெயின்ட் தொழிற்சாலையில் தீ விபத்து: 3 பேர் பலி: பலி எண்ணிக்கை உயரும் அபாயம்
கோவையில் மூளைச்சாவு அடைந்த 11 மாத குழந்தையின் இதயத்தால் மற்றொரு குழந்தைக்கு மறுவாழ்வு: விமானம் மூலம் சென்னை கொண்டு வந்து பொருத்தினர்