மும்பை: போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வாங்கடே மீதான பண பேர புகார் பற்றி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் வலியுறுத்தியிருக்கிறார். நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை போதைப்பொருள் வழக்கில் இருந்து விடுவிக்க 25 கோடி ரூபாய் வரை பேரம் நடைபெற்றதாக முக்கிய சாட்சி பிரபாகர் குற்றம்சாட்டினார். இந்த தகவல் மகாராஷ்டிரா மாநில அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக பெயர் தெரிவிக்காத போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவரிடமிருந்து தனக்கு கடிதம் வந்திருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிரா மாநில அமைச்சருமான நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.