பெங்களூரு: கர்நாடகாவில் எடியூரப்பாவின் முன்னாள் உதவியாளர் வீடு உள்பட பல்வேறு நபர்களுக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். கர்நாடகா நீர்ப்பாசன துறையில் பணியாற்றும் ஒருவர் வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் அளித்ததாக கூறப்படுகிறது. வரி ஏய்ப்பு செய்தும், முறைகேடான வழிகளிலும் சொத்துக்களை குவித்த ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்கள், ஆடிட்டர்களின் வீடுகள், அலுவலகங்கள் என 50க்கும் மேற்பட்ட இடங்களில் 300க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். முக்கியமாக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் முன்னாள் உதவியாளர் உமேஷ் என்பவருக்கு சொந்தமான இடங்களிலும் ஐ.டி. ரெய்டு நடைபெற்றது.