குமரி: சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகம் அருகே ஆழ்கடலில் மீனவர் படகு ஒன்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் அருகே மீன்பிடித் துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில் சுமார் 350 விசைப்படகுகள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் தினசரி இரவு மீன்பிடிக்க சென்று அதிகாலையில் கரைதிரும்புவது வழக்கம். அந்த வகையில் நேற்று இரவு கிட்டத்தட்ட 350 விசைப்படகுகளிலும் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். மீன்பிடித்துவிட்டு இன்று அதிகாலை கரை திரும்பும் போது ஆழ்கடலில் 10 நாட்டிகள் தொலைவில் படகு ஒன்றில் இயந்திர கோளாறு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.