நாகர்கோவில்: குமரி மாவட்ட அதிமுக கூடாரம் காலியாகிறது. முக்கிய நிர்வாகிகள் பலர் இன்று மாலை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைகிறார்கள். அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கை: அதிமுகவின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணாகவும், கட்சிக்கு அவப்பெயர் உண்டாகும் வகையில் செயல்பட்டதாலும், குமரி கிழக்கு மாவட்ட துணை செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், மாவட்ட இணை செயலாளர் லதா ராமச்சந்திரன், தோவாளை ஒன்றிய முன்னாள் செயலாளர் கிருஷ்ணகுமார், ஆரல்வாய்மொழி பேரூர் செயலாளர் மாடசுவாமி, ேதாவாளை ஒன்றிய அவைத்தலைவர் மோசஸ் ராமச்சந்திரன், தோவாளை வடக்கு ஒன்றிய பொருளாளர் தென்கரை மகாராஜன், தெற்கு ஒன்றிய இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர் பாலசுப்பிரமணியன் என்ற சுதாகர்,