பர்மிங்காம்: ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது. உலக பேட்மின்டன் அரங்கில் மிகவும் பெருமை வாய்ந்த தொடரான இதில், உலக சாம்பியன் பி.வி.சிந்து (இந்தியா) தங்கப் பதக்கம் வென்று சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய வீரர்கள் பிரகாஷ் பதுகோன் (1980), புல்லேலா கோபிசந்த் (2001) ஆகிய இருவர் மட்டுமே இதுவரை ஆல் இங்கிலாந்து தொடரில் பட்டம் வென்று முத்திரை பதித்துள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய்னா நெஹ்வால் 2015ல் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். மற்றொரு நட்சத்திரம் பி.வி.சிந்து 2018ல் அரை இறுதி வரை முன்னேறியுள்ளார். சமீபத்தில் நடந்த சுவிஸ் ஓபன் பேட்மின்டன் தொடரின் பைனலில் ஸ்பெயினின் கரோலினா மரினிடம் தோற்று 2வது இடம் பிடித்த சிந்து, ஆல் இங்கிலாந்து ஓபனில் பதக்கம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறார்.