நிங்க்போ: போ நகரில் ஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகத் தரவரிசையில் 25-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, 7-வது இடத்தில் உள்ள சீனாவின் ஷி பெங்குடன் மோதினார்.
51 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் ஆயுஷ் ஷெட்டி 21-13, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 30-ம் நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி காந்த் 21-18, 9-21, 11-21 என்ற செட் கணக்கில் 11-ம் நிலை வீரரான சிங்கப்பூரின் லோ கீன் யூவிடம் தோல்வி அடைந்தார். அதேவேளையில் 35-ம் நிலை வீரரான இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனாய் 24-22, 21-12 என்ற செட் கணக்கில் 62-ம் நிலை வீரரான வியட்நாமின் நூயன் ஹாய் டாங்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 12-ம் நிலை வீரரான லக் ஷயா சென் 12-21, 19-21 என்ற செட் கணக்கில் 22-ம் நிலை வீரரான ஹாங் காங்கின் லீ செக் யுவிடம் தோல்வி அடைந்தார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 2 முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து 15-21, 21-11, 21-19 என்ற செட் கணக்கில் 38-ம் நிலை வீராங்கனையான மலேசியாவின் வாங் லிங் ஷிங்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
