கிருஷ்ணராயபுரம் அருகே பைக்கிலிருந்து விழுந்து ஒருவர் பலி, மற்றொருவர் காயம்

கிருஷ்ணராயபுரம், மார்ச் 14: கிருஷ்ணராயபுரம் அருகே பைக்கில் செல்லும்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் முதியவர் பலியானார். மற்றொருவர் படுகாயமடைந்தார். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் சந்தைபேட்டை பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (53) என்பவரின் பைக்கில், கிருஷ்ணமூர்த்தி பைக்கை ஓட்ட, அதே பகுதியை சேர்ந்த பாலகுமார் (44) பின்னால் அமர்ந்து கொண்டு இருவரும் கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வளையல்காரன்புதூர் பிரிவு ரோடு பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது தனியார் செங்கல் சூளை அருகே செல்லும்போது பைக் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு கிருஷ்ணமூர்த்தியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்ததாக கூறியுள்ளார். பின்னர் காயமடைந்த பாலகுமார் கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். விபத்து குறித்து மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

The post கிருஷ்ணராயபுரம் அருகே பைக்கிலிருந்து விழுந்து ஒருவர் பலி, மற்றொருவர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: