சென்னை: 4,600 ஆண்டுகளுக்கு முன்னாள் வாழ்ந்த சிந்து சமவெளி நாகரிக மக்களின் உணவு பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது. விருப்ப உணவாக மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியை அவர்கள் அதிகம் உண்டதாக வரலாற்று ஆய்வு ஒன்று தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. சிந்து சமவெளி நாகரிக காலகட்டத்தை சேர்ந்த மண்பாண்டங்களில் கால்நடைகள் மற்றும் மாட்டின் கொழுப்பு படிமம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக ஜேர்னல் ஆஃப் ஆர்கியாலஜி சயின்ஸ் இதழில் வெளியான ஆய்வு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த மண்பாண்டங்களில் படிந்திருந்த உயிரி எச்சங்களை சோதனைக்கு உட்படுத்திய போது இதில் இருப்பது பன்றி மற்றும் அசைபோடும் விலங்கினங்களான மாடுகள் மற்றும் ஆடுகளின் இறைச்சி என்பது கண்டறியப்பட்டது.