பாலிகஞ்ச்: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் பீகார் மாநிலம் துல்ஹின் பஜார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பரத்புராவை சேர்ந்தவர் தீரஜ் குமார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கார்பி பகுதிக்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தீரஜின் மனைவி சில வேலை காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு சென்றார். இந்த நேரத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த பெண்ணால் மீண்டும் கணவனின் வீட்டிற்கு வர முடியவில்லை. இதற்கிடையில் தீரஜ் தனது மனைவியை பரத்புராவிற்கு திரும்பி வரச் சொல்லி போனில் கட்டாயப்படுத்தி உள்ளார்.