திருப்பூர்: திருப்பூர் நஞ்சப்பா ஆண்கள் பள்ளி வளாகத்திற்குள் வைக்கப்பட்டிருக்கும் அரசு இலவச தொலைகாட்சி பெட்டிகளை மர்மநபர்கள் உடைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சியின்போது இலவச வண்ணத்தொலைக்காட்சி திட்டம் அறிவிக்கபட்டு அனைத்துதரப்பு மக்களுக்கும் வழங்கப்பட்டது. அதன்பின் 2011ம் நடந்த சட்ட மன்ற தேர்திலில் அதிமுக அதிக இடங்கனை பெற்று ஆட்சி அமைத்தது. இதனால் முந்தைய திமுக அரச திட்டம் என்பதால் கலர் டிவி வழங்கும் திட்டத்தை அதிமுக அரசு தமிழகம் முழுவதிலும் கிடப்பில் போட்டது.
இதன் ஒருபகுதியாக திருப்பூரில் மீதமுள்ள வண்ண தொலைக்காட்சி பெட்டிகளை மாநகராட்சியின் கட்டுபாட்டில் பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் வைக்கப்பட்டுள்ளது.