திருமலை: காலையில் திருமணம் நடந்து மாலையில் வரவேற்பு விழாவில் நடனமாடிய புதுமாப்பிள்ளை மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். இதனால் புதுப்பெண் உள்பட உறவினர்கள் கதறி அழுதனர். தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம், பிராமணகல்லி கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ். இவர் துபாயில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும், சாலூரா கிராமத்தை சேர்ந்த சோப்னா என்பவருக்கும் திருமணம் செய்ய பெரியோர்கள் முடிவு செய்தனர். இதற்கான நிச்சயதார்த்தம் நடந்தது. பிப்.15ம்தேதி (நேற்று முன்தினம்) திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதையடுத்து திருமணத்திற்காக கணேஷ் கடந்த வாரம் துபாயில் இருந்து நிஜமாபாத் வந்தார். இதையடுத்து ஏற்கனவே திட்டமிட்டபடி நேற்று முன்தினம் போதனில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கணேஷ்-சோப்னா திருமணம் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டவர்களின் ஆசியோடு சிறப்பாக நடைபெற்றது.