புதுடெல்லி: இந்தியாவை சேர்ந்த பள்ளி மாணவி தீட்டிய ஓவியத்தை, கூகுள் தேடுபொறி தனது டூடுள் பக்கத்தில் அலங்கரித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவாக நவம்பர் 14 குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. குழந்தை தொழிலாளர்கள் இல்லாமல், அனைத்து குழந்தைகளும் அடிப்படை கல்வி பெற்று முழு பாதுகாப்புடன் அனைத்து உரிமைகளையும் பெற வேண்டும் என்பதே குழந்தைகள் தின விழாவின் நோக்கமாக உள்ளது. உலகின் பல்வேறு அமைப்புக்களும் நாடுகளும் வெவ்வேறு நாட்களில் குழந்தைகள் தினத்தை கொண்டாடி வருகின்றன. இந்நிலையில், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 131வது பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக கூகுள் சிறப்பு டூடுளை உருவாக்கியுள்ளது.