நிர்மலாதேவி வழக்கு ஐகோர்ட் மதுரை கிளைக்கு ஆவணங்கள் மாற்றம்

விருதுநகர்: கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வழக்கு திருவில்லிபுத்தூர் மகிளா கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மூடி முத்திரையிட்ட கவரில்  சமர்ப்பிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. அதன்படி, அனைத்து ஆவணங்களும் திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில்  இருந்து ஐகோர்ட் மதுரை கிளைக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோரின் நீதிமன்ற காவலை வரும் 19ம் தேதி வரை  திருவில்லிபுத்தூர் மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதி லியாகத் அலி நீட்டித்து நேற்று உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: