கரும்புகை அதிக அளவு வெளியேறியதால் தீயணைப்பு வீரர்களுக்கு மூச்சுத் திணறல், கண்ணெரிச்சல் ஏற்பட்டது. மேலும் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டதால் புகையை கட்டுப்படுத்த புகை போக்கியை பயன்படுத்தினர். புகைமூட்டத்தால் வங்கிக்குள் செல்ல முடியாததால் ஆக்சிஜன் சிலிண்டர் கட்டிக் கொண்டு உள்ளே சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வங்கியில் இருந்த பேப்பர்கள், சில படிவங்கள் எரிந்து விட்டதாக கூறப்படுகிறது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மின்கசிவு காரணமாக வங்கியில் தீ விபத்து appeared first on Dinakaran.