சைகை மூலம் விஜயகாந்த் வாக்கு சேகரிப்பு

சென்னை: திருத்தணி சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி சார்பில் தேமுதிகவை சேர்ந்த திருத்தணி டீ கிருஷ்ணமூர்த்தி முரசு சின்னத்தில் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நேற்று மாலை 3 மணிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்வதாக கூறப்பட்டது. ஆனால், விஜயகாந்த் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்கி இருந்து அங்கிருந்து இரவு 7 மணி அளவில் பிரசார வேன் மூலம் திருத்தணி நோக்கி வந்தார். பிரசார வேனில் இருந்த விஜயகாந்த் கட்டை விரலை உயர்த்தி புன்னகையுடன் வந்தார். அப்போது தொண்டர்கள், வாழ்த்து கோஷம் போட்டு உற்சாக வரவேற்பளித்தனர். இதை தொடர்ந்து பள்ளிப்பட்டு பகுதிக்கு வேட்பாளருக்கு ஆதரவு திரட்ட புறப்பட்டுச் சென்றார்….

The post சைகை மூலம் விஜயகாந்த் வாக்கு சேகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: